search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் என்கவுண்டர்"

    சத்தீஸ்கரில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். #CRPFjawan #Chhattisgarhblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், தன்ட்டேவாடா மாவட்டத்துக்குட்பட்ட அரன்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, மத்திய ரிசர்வ் படை போலீசாருடன் விரைந்து சென்ற கூட்டப்படையினர் அந்த இடத்தை இன்று மாலை முற்றுகையிட்டனர்.

    அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு வீரர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #Chhattisgarhblast
    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.

    இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அவ்வகையில், தண்டேவாடா-பிஜப்பூர் எல்லையில் உள்ள டைம்னார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இன்று காலை ரோந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிற்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் சில மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



    அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ×